கவுணி அரிசிப் பிடிக்கொழுக்கட்டை
தேவையானவை:
கவுணி {கருப்பு }அரிசி -1கப் ,
-1,வெல்லம் (பொடித்தது )-1/2
கப்,காராமணி பயிறு -1/4கப் ,ஏலக்காய் -5,தேங்காய் பூ-2 டேபிள்
ஸ்பூன்.
செய்முறை :
கவுணி (கருப்பு ) அரிசியை நீரில் 10நிமிடம் ஊறவைத்து நன்கு நீர் வடித்து வைக்கவும் .ஒரு மணி நேரத்திற்கு பிறகு நமத்து ,உலர்த்த நிலையில் உள்ள அரிசியை நைசான ரவையாக பொடிக்கவும் .காராமணி பயிறை லேசாக வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு குழையாமல் மலரவேகவைத்து நீர் வடித்து வைக்கவும்.
கொதிநீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீரை தேங்காய் பூவுடன் சேர்த்து பாகு வைக்கவும், பாகு கெட்டியாகும் போது கவுணி கருப்பு அரிசி ரவை ,காராமணி பயிறு,ஏலபொடி சேர்த்து கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாத நிலை வந்ததும் இறக்கி ஆறியபின் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
இந்த கொழுக்கட்டை
சுவையானது .சத்து நிரம்பியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக